தமிழ்நாடு செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு

Published On 2025-06-23 10:52 IST   |   Update On 2025-06-23 10:52:00 IST
  • கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
  • இந்த நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.

கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பவகத், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மோகன் பகவத்திற்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பங்கேற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்து முன்னணி நடத்திய மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள்அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அண்ணா, பெரியாரை விமர்சிக்கும் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News