தமிழ்நாடு செய்திகள்
ஆட்சியில் பங்கு: 2026-ல் வாய்ப்பில்லை- விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார்
- கட்சி தொடங்கியது முதல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிக-வின் முழக்கம்.
- காலம் கனியும்போது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்போம்.
விழுப்புரத்தில் நூலக கட்டிடத்தை வி.சி.க. பொதுச் செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான ரவிக்குமார் திறந்து வைத்தார். அப்போது 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. ஆட்சியில் பங்கு கேட்குமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு ரவிக்குமார் பதில் அளித்ததாவது:-
* கட்சி தொடங்கியது முதல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிக-வின் முழக்கம்
* காலம் கனியும்போது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்போம்.
* 2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு என்பதற்கான வாய்ப்பு இல்லை.
* தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்
* கடந்த தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றோம்.
* 2026 தேர்தலில் இரட்டை இலக்கத்தில் விசிக-வுக்கு திமுக இடங்கள் வழங்கும்.
இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்தார்.