தமிழ்நாடு செய்திகள்

அணில் ஏன் அங்கிள், அங்கிள் என கத்துகிறது... ஜங்கிள், ஜங்கிள் என்று தானே கத்த வேண்டும்... விஜயை விமர்சித்த சீமான்

Published On 2025-08-27 13:15 IST   |   Update On 2025-08-27 13:15:00 IST
  • விஜயகாந்த் பற்றி பேசுவதனால் வாக்குகள் கிடைத்து விடுமா?
  • நான் முதல்வராக வந்தால் முதல் கையெழுத்து அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்து வருபவர்களுக்கு அரசு வேலை என்பதுதான்.

மதுரை:

மதுரையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சியில் வருகிற பிப்ரவரி 7-ந்தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. ஒரு கட்சியின் மாநாடு என்றால் எப்படி நடத்த வேண்டும்? என வருகிற பிப்ரவரி 7-ந்தேதி திருச்சியில் நாங்கள் நடத்தும் மாநாட்டை பாருங்கள். அந்த மாநாட்டில் எத்தனை லட்சம் பேர் கூடுகிறார்கள் என பொறுத்திருந்து பாருங்கள்.

ஒரு மாநாட்டு உரை என்பது எப்படி இருக்கும் என்பதை அப்போது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் விஜய்யின் பேச்சை மூத்த தலைவர்கள் விமர்ச்சிக்கிறார்கள். அணில் ஏன் அங்கிள், அங்கிள் என கத்துகிறது. ஜங்கிள், ஜங்கிள் என்று தானே கத்த வேண்டும். கடந்த மாநாட்டில் சி.எம். சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக எப்படி மாறினார்.

த.வெ.க. மாநாட்டில் மரணம் என்பதை கட்சி மரணம் என்று பார்க்க முடியவில்லை. விஜய்யின் பவுன்சர்கள் அத்துமீறல் குறித்து ஓட்டு கேட்கும் போது நீங்கள் இவ்வாறு ஆக வர முடியாது அல்லவா? விஜய் மாநாட்டிற்கு வந்த கூட்டத்தை பார்க்காதீர்கள். நான் வைத்திருப்பது விதை நெல். பதர் கிடையாது.

விஜயகாந்த் பற்றி பேசுவதனால் வாக்குகள் கிடைத்து விடுமா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள். மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று. புயல், சுனாமியே வந்தாலும் எனது தம்பிகள், தங்கைகள், தாய்மார்கள் என்னுடன் நிற்பார்கள்.

புதிய மசோதா அனைவருக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள். குஜராத் கலவரத்திற்கும், பா.ஜ.க. விற்கும் தொடர்பில்லை என்று கூறுகிறார். அதை நீங்கள் ஏற்கிறீர்களா? அமலாக்கத்துறை சோதனை செய்வது எந்த கட்சியில்? எலக்ட்ரோ பாண்டு அதிகம் பெற்றது எந்த கட்சி?

பீகார் முதல்வர் சொல்வது குறித்து ஈரோட்டில் காசு கொடுக்கும்போது தடுக்காத தேர்தல் ஆணையம், கள்ள ஓட்டு போடும் போது தடுக்காத தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் எப்படி நேர்மையாக இருக்கும். மொத்தமாக தவறாக தான் இருக்கும். வாக்கு சீட்டு முறையை பின்பற்ற வேண்டும். இந்த மெஷினை ஜப்பான் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. ஆனால் ஜப்பானில் எந்திர வாக்குப்பதிவா நடக்குது.

பின்னர் எதற்கு 42 நாள் வாக்குப்பதிவு மெஷினை உள்ளே வைக்கிறீர்கள். போலீசே அதற்கு பாதுகாப்பு. உன்னிடம் சம்பளம் வாங்கக்கூடிய போலீஸ் தான் பாதுகாப்புக்கு நிற்கிறார்கள். வாக்கு பெட்டியை மாற்றமாட்டார்களா?

முதலீடு ஈர்க்க முதல்வர் வெளிநாடு செல்கிறார். முதலீடுகள் ஈர்க்க சென்றால் ஏற்கனவே ஈர்க்க சென்றது என்ன ஆனது எனக்கூறினாரா?. தேர்தலில் நான் தனியாகத்தான் நிற்பேன். கூட்டணி வைத்து ஏதாவது பிரச்சனையை இதுவரை சரி செய்து உள்ளார்களா? என்ன சாதித்துள்ளார்கள்.

நான் முதல்வராக வந்தால் முதல் கையெழுத்து அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்து வருபவர்களுக்கு அரசு வேலை என்பதுதான். இதுபோல 100 கையெழுத்து போட்டு நாட்டின் தலை எழுத்தை மாற்ற வேண்டும். கம்யூனிஸ்டு கட்சி ஆபீசை கல்யாண மண்டபமாக மாற்றி வருகிறார்கள். பா.ஜ.க. ஆபீசில் இஸ்லாமிய ஆணையும், இந்து பெண்ணையும் திருமணம் முடித்து வைப்பார்களா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உயர்ந்த வகுப்பினருக்கும், தாழ்ந்த வகுப்பினருக்கும் கல்யாணம் நடத்தி வைப்பார்களா?

முதல்வர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பது அவரவருடைய விருப்பம். சகிக்க முடியாத சொத்து வரி, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு பற்றி பேசுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News