தமிழ்நாடு செய்திகள்

டி.டி.வி. தினகரனிடம் நேரடியாக சமரசம் பேச தயார்- நயினார் நாகேந்திரன்

Published On 2025-09-06 21:59 IST   |   Update On 2025-09-06 21:59:00 IST
  • ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
  • திமுக என்றுமே தொடர்ந்து ஆட்சி அமைத்தது கிடையாது.

மதுரையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் நேரடியாக சென்று சமரசம் பேச தயாராக இருக்கிறேன்.

டிடிவி தினகரன் வெளியேறியதற்கு நான் பொறுப்பாக முடியாது. டிடிவி தினகரன் ஏன் கூட்டணியில் இருந்து வெளியில் சென்றார் என அவரைச் சொல்லச் சொல்லுங்கள்.

திமுக ஆட்சியில் இருக்க கூடாது. ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

திமுக என்றுமே தொடர்ந்து ஆட்சி அமைத்தது கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News