தமிழ்நாடு செய்திகள்

புதிய நகைக் கடன் "நகல்" விதிமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் - சு.வெங்கடேசன் எம்.பி. நம்பிக்கை

Published On 2025-06-06 10:58 IST   |   Update On 2025-06-06 10:58:00 IST
  • உங்கள் கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்படும்;
  • மக்களின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்பட உள்ளது.

சென்னை:

புதிய நகைக் கடன் "நகல்" விதிமுறைகள் எளிய, நடுத்தர மக்களின் வாழ்வுரிமையை பறிக்கிற வகையில் அமைந்திருப்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மே 28, 2025 அன்று சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியிருந்தார். இதற்கு ஜூன் 4, 2025 அன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பதில் அளித்துள்ளார். அதனை எக்ஸ் தள பக்கத்தில் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் பதில்,

தற்போது வெளியிடப்பட்டு இருப்பது நகல் விதிமுறைகளே; உங்கள் கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்படும்; இது தொடர்பான மக்களின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்பட உள்ளது; சிறு கடன்தாரர்கள் உள்ளிட்டோர் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் பதில் அளித்துள்ளார்.

*முயற்சிகள் தொடரும்*

ஏற்கனவே நான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து இப் பிரச்சினை மீதான தீர்வைக் கோரிய பின்புலத்தில் அவர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார்.

நகல் விதிமுறைகள் இறுதி செய்யப்படும் போது நாம் எழுப்பியுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படுமென்று நம்புகிறேன் என சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News