அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது என் தவறு: வளர்த்த கடாவே மார்பில் பாய்கிறது - ராமதாஸ் வேதனை
- அன்புமணி ராமதாசை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியது என் தவறு.
- 4 சுவற்றிற்குள் பேசி முடிக்க வேண்டியதை நடு வீதிக்கு கொண்டு வந்தது யார்?
தைலாபுரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தான் செய்த தவறுகளை மறைத்து பட்டாளி மக்கள் கட்சியினரையும், மக்களையும் திசை திருப்ப அன்புமணி முயற்சி செய்கிறார்.
* கட்சியின் கட்டுப்பாட்டிற்கு களங்கத்தை அன்புமணி ஏற்படுத்தி விட்டார்.
* முகுந்தன் இளைஞரணி தலைவராக்கப்பட்டபோது மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது சரியான செயலா?
* அன்புமணி கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக பல செயல்களை செய்து வருகிறார்.
* அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை என பலரும் வருந்தினார்கள்.
* அன்புமணி ராமதாசை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியது என் தவறு.
* அன்புமணி தான் தவறான ஆட்டத்தை தொடங்கியவர். மேடை நாகரீகம், சபை நாகரீகத்தை கடைபிடிக்காதவர் அன்புமணி.
* மேடை நாகரீகம் இல்லாமல் காலை ஆட்டிக்கொண்டு அன்புமணி இருந்தது சரியா? மைக்கை தூக்கி தலையில் போடுவது போல் அன்புமணி செயல்பட்டார்.
* பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொண்டது யார்?
* 4 சுவற்றிற்குள் பேசி முடிக்க வேண்டியதை நடு வீதிக்கு கொண்டு வந்தது யார்?
* கசப்பான வார்த்தைகளை பதிலாக கொடுக்கும் நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.
* எதிர்பாராத வகையில் வளர்த்த கடாவே மார்பில் வீறு கொண்டு பாய்கிறது என்று வேதனையுடன் கூறினார்.