தமிழ்நாடு செய்திகள்

பீகாரில் காங்கிரசிற்கு இடமில்லை என்பதை உணர்ந்தே ராகுல் காந்தி மக்களை திசை திருப்ப பார்க்கிறார்- நயினார் நாகேந்திரன்

Published On 2025-11-05 21:36 IST   |   Update On 2025-11-05 21:36:00 IST
  • தங்களுக்கு வாக்களித்த தமிழக மகளிரின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்.
  • தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்செய்வது தான் தற்போதைய உண்மையான தேவை.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

வணக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!

பிகாரில் காங்கிரசிற்கு இடமில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்துவிட்டதால், மக்களைத் திசைதிருப்பவே தங்களது சகோதரர் ராகுல்காந்தி

அவர்கள் ஹரியானாவைக் கையில் எடுத்துள்ளார் என்பதை அனைவரும் அறிவர்.

எங்கேயோ கேட்டதைப் போல இருக்கிறதா? ஆமாம், தமிழகத்தில் திமுகவிற்கு இடமில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து, மக்களைத் திசைதிருப்ப SIR -ஐ கையில் எடுத்த தங்களது பாணி தான் இந்த நாடகத்திற்கு அடிப்படையே.

அரசியல் சாசனத்தின்படி தன்னிச்சையாக செயல்படும் தேர்தல் ஆணையத்தை இப்படி எந்தவொரு அடிப்படையுமின்றி குறை சொல்வதை விடுத்து, தங்களுக்கு வாக்களித்த தமிழக மகளிரின் பாதுகாப்பை மேம்படுத்தி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்செய்வது தான் தற்போதைய உண்மையான தேவை.

இதை செய்வீர்களா, முதல்வரே?

பின்குறிப்பு : நீங்கள் செய்யமாட்டீர்கள் என்பதை அனைவரும் அறிவர்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News