தமிழ்நாடு செய்திகள்

மலையடிவாரத்தில் பதுங்கி இருந்த கொலையாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

Published On 2025-05-24 07:29 IST   |   Update On 2025-05-24 07:30:00 IST
  • மூதாட்டி சரஸ்வதியை கொடூரமாக கொன்று கொள்ளையடித்த நரேஷ் குமார் சங்ககிரி அருகே மலையடிவாரத்தில் பதுங்கி இருந்துள்ளார்.
  • நரேஷ் குமார் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலம்:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே மூதாட்டியை கொன்ற கொலையாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 20-ந்தேதி மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி சரஸ்வதியை கொடூரமாக கொன்று கொள்ளையடித்த நரேஷ் குமார் சங்ககிரி அருகே மலையடிவாரத்தில் பதுங்கி இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்ற நரேஷ் குமாரின் காலில் துப்பாக்கியால் போலீசார் சுட்டனர்.

நரேஷ் குமார் கத்தியால் வெட்டியதில் 2 போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நரேஷ் குமார் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. நரேஷ் குமார் வயதான மூதாட்டிகளையும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து நகை கொள்ளையடித்து விட்டு அவர்களை கொலை செய்து வந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Tags:    

Similar News