தமிழ்நாடு செய்திகள்

அரசியலே வேண்டாம் என்கிற அளவுக்கு மன அழுத்தத்தில் இருக்கிறேன் - பா.ம.க. எம்.எல்.ஏ. அருள்

Published On 2025-05-30 12:43 IST   |   Update On 2025-05-30 14:44:00 IST
  • கட்சியில் நிலவும் சூழல்களால் சொல்ல முடியாத அளவுக்கு மன உளைச்சலில் இருக்கிறேன்.
  • எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என நான் எப்போது கூறினேன்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். கட்சி தலைமை பண்பு, பக்குவம் இல்லாதவர் எனவும் குற்றம் சாட்டினார். இது அன்புமணி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சென்னை சோழிங்கநல்லூரில் பா.ம.க. நிர்வாகிகளுடன் இன்று முதல் 3 நாட்கள் அன்புமணி ஆலோசனை நடத்துகிறார்.

இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்திப்பதற்காக தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ம.க தொண்டர்கள் உச்சகட்ட மனஉளைச்சல், மனவேதனையில் இருக்கிறோம். சொல்லொனா துயரத்தில் உள்ளோம். அனைத்து நெருக்கடியையும் கடந்து வருவோம். அரசியலே வேண்டாம் என்ற அளவுக்கு மன உளைச்சலில் உள்ளேன். எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்ய போகிறேன் என்று உங்களுக்கு யார் சென்னது. டாக்டர் ராமதாஸ் எனக்கு வழங்கிய எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்யமாட்டேன். உச்சபட்ச அதிகாரம் கொண்டவர் ராமதாஸ். அவர் தான் எங்களுக்கு கடவுள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News