தமிழ்நாடு செய்திகள்

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்திற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

Published On 2025-09-04 15:31 IST   |   Update On 2025-09-04 15:31:00 IST
  • 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அமல்.
  • புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிப்பிடுகையில்,"ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்ததன் மூலம், ஏழை பாட்டாளிகளின் மீதான பணச்சுமை குறைகிறது. இதற்காக மத்திய அரசைப் பாராட்டலாம்" என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News