மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தை- ஓடோடி வந்த மகன்
- மருத்துவமனையில் டாக்டர் ராமதாசுக்கு இதயம் தொடர்பாக முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
- டாக்டர் ராமதாசை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சென்னை:
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீப காலமாக மாநாடு, பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட கட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார். இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அவர் இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் டாக்டர் ராமதாசுக்கு இதயம் தொடர்பாக முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று டாக்டர் செங்குட்டுவேல், ராமதாசுக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமதாசை பார்க்க அவரது மகனும் பா.ம.க. தலைவருமான அன்புமணி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு மருத்துவர்களை சந்தித்து ராமதாசுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
டாக்டர் ராமதாசை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.