தமிழ்நாடு செய்திகள்

நீட் தேர்வு விவகாரம் - சட்டசபையில் அ.தி.மு.க.-வினர் கடும் அமளி

Published On 2025-04-23 12:53 IST   |   Update On 2025-04-23 12:53:00 IST
  • 7.5% இடஒதுக்கீடு தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அ.தி.மு.க.வினர் விவாதம் நடத்தினர்.
  • அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க. வலியுறுத்தினர்.

சட்டசபையில் 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலை படிப்பில் சேர்ந்தோருக்கான கட்டணம் குறித்து கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.

7.5% இடஒதுக்கீடு தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அ.தி.மு.க.வினர் விவாதம் நடத்தினர்.

நீட் தேர்வு பிரச்சனையில் மக்களிடம் சாயம் வெளுத்துவிடும் என்பதால் 7.5% இடஒதுக்கீடு கொண்டு வந்தீர்கள் என மா.சுப்பிரமணியன் கூறினார்.

இதற்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தவறான தகவலை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறி இருப்பதாக அமளியில் ஈடுபட்டனர்.

அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க. வலியுறுத்தினர்.

Tags:    

Similar News