தமிழ்நாடு செய்திகள்

கோயம்பேடு- பட்டாபிராம் இடையே மெட்ரோ ரெயில்: தமிழக அரசு ஒப்புதல்

Published On 2025-05-02 17:48 IST   |   Update On 2025-05-02 17:48:00 IST
  • 21.76 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரெயில் விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல்.
  • மத்திய அரசின் நிதி பங்களிப்பிற்கும், பன்னாட்டு நிதி உதவி கோரவும் அனுமதி.

சென்னை, கோயம்பேடு மற்றும் பட்டாபிராம் இடையே சென்னை வெளிவட்ட சாலையில் மெட்ரோ ரெயில் சேவைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, 21.76 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரெயில் விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.9928.33 கோடி மதிப்பீட்டில், 464 கோடியில் மூன்று மேம்பாலங்களுடன் கூடிய வழித்தடம் அமைக்கப்படுகிறது.

மேலும், மத்திய அரசின் நிதி பங்களிப்பிற்கும், பன்னாட்டு நிதி உதவி கோரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News