தமிழ்நாடு செய்திகள்
மருதுபாண்டியரின் 224-வது நினைவு தினம்: அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை
- வரும் 24-ந்தேதி மருதுபாண்டியரின் 224-வது நினைவு தினம் மற்றும் குரு பூஜை.
- மருதுபாண்டியருடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருதுபாண்டியரின் 224-வது நினைவு தினம் மற்றும் குரு பூஜையையொட்டி 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியருடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.