என் மலர்
நீங்கள் தேடியது "மருதுபாண்டியர் நினைவு தினம்"
- வரும் 24-ந்தேதி மருதுபாண்டியரின் 224-வது நினைவு தினம் மற்றும் குரு பூஜை.
- மருதுபாண்டியருடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருதுபாண்டியரின் 224-வது நினைவு தினம் மற்றும் குரு பூஜையையொட்டி 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியருடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக்கடைகளும், தனியார் மதுபான விற்பனைஸ்தலங்களும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- வருகிற 29-ந் தேதி மாலை 6 மணி முதல் 30-ந் தேதி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும், தனியார் மதுபான விற்பனை ஸ்தலங்களும் மூடப்படும்.
விருதுநகர்:
மருதுபாண்டியர் சகோதரர்கள் நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுவதையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக்கடைகளும், தனியார் மதுபான விற்பனைஸ்தலங்களும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேபோன்று பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு வருகிற 29-ந் தேதி மாலை 6 மணி முதல் 30-ந் தேதி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும், தனியார் மதுபான விற்பனை ஸ்தலங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.






