தமிழ்நாடு செய்திகள்

மாம்பழங்கள் கொள்முதல்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

Published On 2025-06-24 17:13 IST   |   Update On 2025-06-24 17:13:00 IST
  • மத்திய கொள்முதல் முகமைகள் தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்த மாம்பழங்களை கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும்.
  • மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டி-யை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.

மாம்பழங்களை உரிய விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடுமாறு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது.

மத்திய கொள்முதல் முகமைகள் தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்த மாம்பழங்களை கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும். மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டி-யை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். மாம்பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்கள் தரக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வழிகாட்டுதல்கள் வழங்கவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News