தமிழ்நாடு செய்திகள்

கீழடி நமது தாய் மண், பொருநை தமிழர்களின் பெருமை..!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-12-20 17:36 IST   |   Update On 2025-12-20 17:36:00 IST
  • பொருநை அருங்காட்சியகம் தமிழர்களின் 3,200 ஆண்டுகால பழமையான நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் அமைப்பு.
  • நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அதிநவீன தொழில்நுட்படத்துடன் வடிவமைப்பு.

நெல்லையில் திறக்கப்படவுள்ள பொருநை அருங்காட்சியம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில்,"பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் ஏராளமான வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளது. அனைவரும் அணிஅணியாக வருமாறு" அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:-

பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் ஏராளமான வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளது. பொருநை அருங்காட்சியகம் தமிழர்களின் 3,200 ஆண்டுகால பழமையான நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.

ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், சிவகளையில் கிடைத்த இரும்பு கருவிகளை அருங்காட்சியகத்தில் காணலாம்.

பொருநை ஆற்றங்கரையோரம் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், பண்பாடு, கலைகளை திரையில் காணும் வகையில் தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அதிநவீன தொழில்நுட்படத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கீழடி நமது தாய் மண், பொருநை தமிழர்களின் பெருமை என்பதை பறைசாற்றுவோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News