தமிழ்நாடு செய்திகள்
மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றிணைந்து நிற்போம்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- சமூக ஊடகப் பக்கங்களில் ‘ஓரணியில் தமிழ்நாடு' லோகோவை முகப்புப் படமாக(DP) திமுகவினர் வைக்க வேண்டும்.
- ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றிணைந்து நிற்போம். நம்மை அடக்க நினைத்தால் ஒன்றிணைந்து எதிர்ப்போம். இது தமிழர்களின் தனிக் குணம்.
சமூக ஊடகப் பக்கங்களில் 'ஓரணியில் தமிழ்நாடு' லோகோவை முகப்புப் படமாக(DP) திமுகவினர் வைக்க வேண்டும்.
ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல.
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் திரட்டுவதற்கான முயற்சி. ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? நாம் உதயசூரியன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.