தமிழ்நாடு செய்திகள்
கரூர் கூட்டநெரிசல்: உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு த.வெ.க.வினர் முறையீடு - நாளை விசாரணை
- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு சென்று முறையீட்டுள்ளனர்.
- சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று முறையீட்டனர்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு தமிழக வெற்றிக்கழகத்தினர் முறையீடு செய்துள்ளனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு சென்று முறையீட்டுள்ளனர்.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று முறையீட்டனர்.
இதனை தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுக்க நீதிபதி தண்டபாணி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.