கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: பனையூர் தவெக அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வருகை
- 50-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.
- மொத்தம் 306 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரம் பகுதி சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே வனத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், போலீஸ் வீடியோகிராபர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். தற்போது சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கடை, பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள், செல்போன் கடை வைத்திருப்பவர்கள், உயிரிழந்த 41 குடும்பத்தினர், உறவினர்கள், காயமடைந்தவர்கள் என மொத்தம் 306 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
இதனிடையே, சி.பி.ஐ. அதிகாரிகளின் ஒரு குழு சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் விஜய் பிரசார வாகனத்தை ஆய்வு செய்வதற்காக வந்துள்ளனர். விஜயின் பிரசார பேருந்தை அளவிடுவதுடன் சிசிடிவி பதிவுகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த தகவலை அறிந்து விஜய் நீலாங்கரையில் இருந்து புறப்பட்டு பனையூர் வந்தார்.