தமிழ்நாடு செய்திகள்

கூட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு தரப்பட்டது- கரூர் சம்பவம் குறித்து ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம்

Published On 2025-09-28 08:05 IST   |   Update On 2025-09-28 08:05:00 IST
  • த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • கூட்ட நெரிசல் குறித்து விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

கரூர்:

கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

* கரூர் கூட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு தரப்பட்டது.

* கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

* த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

* கூட்ட நெரிசல் குறித்து ஆணைய விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Tags:    

Similar News