தமிழ்நாடு செய்திகள்

கந்த சஷ்டி திருவிழா: தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்

Published On 2025-10-26 07:37 IST   |   Update On 2025-10-26 07:37:00 IST
  • பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
  • திருச்செந்தூரில் இருந்து நாளை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06135), மறுநாள் காலை 8 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக, திருச்செந்தூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06136), மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நேற்று (சனிக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News