தமிழ்நாடு செய்திகள்

தமிழக அரசு தொடர்ந்த அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு

Published On 2025-04-21 12:58 IST   |   Update On 2025-04-21 12:58:00 IST
  • அமலாக்கத்துறை சார்பில், டாஸ்மாக்கில் சட்ட விரோதமாக ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது.
  • பெண் அதிகாரிகளை இரவில் தங்க வைக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

சென்னை:

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சார்பில் கடந்த மாதம் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையை சட்ட விரோதம் என அறிவிக்க கோரி தமிழக அரசு சார்பிலும் டாஸ்மாக் நிறுவனம் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, சட்டத்தை மதிக்காமல் தங்கள் விருப்பப்படி அமலாக்கத்துறையினர் சோதனையிட்டனர். சில அதிகாரிகளை அமலாக்கத்துறை இரவில் தூங்க விடாதது மனித உரிமை மீறல் என்று டாஸ்மாக் மற்றும் அரசு சார்பில் வாதிட்டனர்.

அமலாக்கத்துறை சார்பில், டாஸ்மாக்கில் சட்ட விரோதமாக ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. சட்டத்துக்கு உட்பட்டே சோதனை நடத்தப்பட்டது. பெண் அதிகாரிகளை இரவில் தங்க வைக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து விட்ட நிலையில் நாளை மறுநாள் (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News