தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியில் எங்கும் குட்கா, எங்கும் போதைப்பொருள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-04-28 15:18 IST   |   Update On 2025-04-28 15:18:00 IST
  • தமிழகத்தில் 96 ஆயிரம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

அதிமுக ஆட்சியில் எங்கும் குட்கா, எங்கும் போதைப்பொருள் என்ற நிலை இருந்தது.

உயர் பதவியில் இருந்த காவலர்கள் கூட சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தமிழகத்தில் 96 ஆயிரம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த மாநிலமாக உள்ளது.

குட்கா விற்கும் கடைகளை மூடி வருகிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News