தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு நான் காரணமா? - ஜி.கே.மணி விளக்கம்

Published On 2025-05-31 12:17 IST   |   Update On 2025-05-31 13:03:00 IST
  • மனசாட்சிபடி செயல்பட வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்.
  • திலகபாமாவை பொறுப்பில் இருந்து எடுக்க வேண்டாம் என ராமதாசிடம் சண்டையிட்டேன்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்திக்க வந்த கவுரவ தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு நான் காரணம் என்ற செய்தியை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்.

* பா.ம.க. விரிசலுக்கு நான் காரணம் என்பதை எப்படி ஏற்பேன்.

* மனசாட்சிபடி செயல்பட வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்.

* காலச்சூழலால் பா.ம.க.வில் ஏற்பட்ட நெருக்கடியை சரிசெய்ய முயன்று கொண்டிருக்கிறோம்.

* ஒன்றாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து இருவரிடமும் பேசி வருகின்றேன்.

* திலகபாமாவை பொறுப்பில் இருந்து எடுக்க வேண்டாம் என ராமதாசிடம் சண்டையிட்டேன்.

* எந்த பொறுப்பாளர்களையும் மாற்ற வேண்டாம் என ராமதாசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

* ராமதாசும், அன்புமணியும் சந்தித்தால் கட்சி வளர்ச்சிக்கு அது மிகப்பெரிய அளவில் உதவும்.

* அன்புமணியிடமும் தொடர்ந்து பேசி கொண்டுதான் இருக்கிறோம்.

* ராமதாசும், அன்புமணியும் சந்தித்து பேசினார் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News