பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு நான் காரணமா? - ஜி.கே.மணி விளக்கம்
- மனசாட்சிபடி செயல்பட வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்.
- திலகபாமாவை பொறுப்பில் இருந்து எடுக்க வேண்டாம் என ராமதாசிடம் சண்டையிட்டேன்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்திக்க வந்த கவுரவ தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு நான் காரணம் என்ற செய்தியை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்.
* பா.ம.க. விரிசலுக்கு நான் காரணம் என்பதை எப்படி ஏற்பேன்.
* மனசாட்சிபடி செயல்பட வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்.
* காலச்சூழலால் பா.ம.க.வில் ஏற்பட்ட நெருக்கடியை சரிசெய்ய முயன்று கொண்டிருக்கிறோம்.
* ஒன்றாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து இருவரிடமும் பேசி வருகின்றேன்.
* திலகபாமாவை பொறுப்பில் இருந்து எடுக்க வேண்டாம் என ராமதாசிடம் சண்டையிட்டேன்.
* எந்த பொறுப்பாளர்களையும் மாற்ற வேண்டாம் என ராமதாசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
* ராமதாசும், அன்புமணியும் சந்தித்தால் கட்சி வளர்ச்சிக்கு அது மிகப்பெரிய அளவில் உதவும்.
* அன்புமணியிடமும் தொடர்ந்து பேசி கொண்டுதான் இருக்கிறோம்.
* ராமதாசும், அன்புமணியும் சந்தித்து பேசினார் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.