தமிழ்நாடு செய்திகள்

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ்

Published On 2025-09-18 20:53 IST   |   Update On 2025-09-18 21:16:00 IST
  • அபகரிப்பு அரசியலில் இருந்து அரவணைக்கும் அரசியலை நோக்கி நகர்ந்திருக்கிறேன்.
  • அவருடைய உள்ளாசை திராவிட கழகம் ஒன்றாக வேண்டும் எனக் கூட நினைக்கலாம்.

திமுகவில் இணைந்தது குறித்து மருது அழகுராஜ் கூறியதாவது;-

அபகரிப்பு அரசியலில் இருந்து அரவணைக்கும் அரசியலை நோக்கி நகர்ந்திருக்கிறேன். 20 வருடமாக அதிமுகவிற்கு என்னுடைய தமிழ், எழுத்து, பேச்சையும் ஒப்படைத்து உழைத்தவன். எடப்பாடியின் அபகரிப்பு அரசியலை, ஆக்கிரமிப்பு அரசியலை ஜனநாயகத்திற்கு புறம்பானது என கண்டித்த காரணத்தினால் அங்கிருந்து விலக்கப்பட்டேன். அதிமுக-வை எடப்பாடி பழனிசாமி அபரிகரித்தார். இப்போது அதிமுகவை பாஜக அபகரித்துள்ளது.

எம்ஜிஆர் காலத்தில் திராவிடக்கழகம் ஒன்றிணைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது முடியாமல் போனது. தற்போது எடப்பாடி பழனிசாமி புண்ணியத்தில் திராவிட இயக்கம் ஒன்றாகக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அன்வர் ராஜா வந்துள்ளார். நான் வந்துள்ளேன். இன்னும் பல்லாயிரம் மற்றும் பல லட்சம் பேர் வருவார்கள்.

எடப்பாடி பழனிசாமியே ஆசி கொடுத்து அனுப்பி வைப்பார். திமுக கட்சியை வலப்படுத்துவற்கு எடப்பாடி பழனிசாமியும் துணையாக இருக்கிறார். அவருடைய உள்ளாசை திராவிட கழகம் ஒன்றாக வேண்டும் எனக் கூட நினைக்கலாம். அதிமுக-விற்கு பல காலம் உழைத்தவர்களை நல்ல எண்ணத்துடன் அனுப்பி வைத்துள்ளார் என எடுத்துக்கொள்கிறேன்.

இவ்வாறு மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News