தமிழ்நாடு செய்திகள்
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
- ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க நேற்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
- விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க 8-ந் தேதி (நேற்று) வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10-ந் தேதி (நாளை) வரை நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.