தமிழ்நாடு செய்திகள்

கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களை நீக்கும் உரிமை இ.பி.எஸ்-க்கு உண்டு: எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.

Published On 2025-11-01 15:23 IST   |   Update On 2025-11-01 15:23:00 IST
  • யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த விழாவை முன்னெடுத்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
  • வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

திருப்பூர் கலைஞர் மத்திய பேருந்து நிலையம் முன்பு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும் பல்லடம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எம் .எஸ். எம். ஆனந்தன் பங்கேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த விழாவை முன்னெடுத்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

அதன் இடையிலே யார் வேண்டுமானாலும் வருவார்கள் , போவார்கள். கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களை கட்சியை விட்டு நீக்கும் உரிமை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News