தமிழ்நாடு செய்திகள்

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கணவர் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

Published On 2025-04-25 03:00 IST   |   Update On 2025-04-25 03:00:00 IST
  • முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் உடல்நலக் குறைவால் காலமானார்.
  • அவரது மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை:

சென்னை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் உடல்நலக் குறைவால் காலமானார்.

இந்நிலையில், அவரது மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர், செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா கணவர் சந்திரசேகர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

கணவரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் கோகுல இந்திராவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இந்த துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், சந்திரசேகர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News