தமிழ்நாடு செய்திகள்

தமிழக ஆளுநரை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

Published On 2026-01-06 09:08 IST   |   Update On 2026-01-06 09:08:00 IST
  • அமைச்சர்கள் தொடர்புடைய முறைகேடுகளுக்கான ஆதாரங்களை ஆளுநரிடன் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • மணல் கொள்ளை வழக்கில் ரூ.3,000 கோடி முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளிக்க உள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார்.

சந்திப்பின்போது, அமைச்சர்கள் தொடர்புடைய முறைகேடுகளுக்கான ஆதாரங்களை ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யாதது குறித்தும், அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான மணல் கொள்ளை வழக்கில் ரூ.3,000 கோடி முறைகேடு தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளிக்க உள்ளார். 

Tags:    

Similar News