2021 சட்டசபை தேர்தலில் சூழ்ச்சியால் தோல்வி... 2026-ல் 100% வெற்றி உறுதி - எடப்பாடி பழனிசாமி
- அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அ.தி.மு.க.வின் தாரக மந்திரம்.
- தனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது குறை இருந்ததா?
அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தீய சக்தி தி.மு.க.வை தமிழகத்தில் இருந்து அடியோடு அகற்றவே எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார்.
* அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே அ.தி.மு.க.வின் தாரக மந்திரம்.
* நாட்டு மக்களைத்தான் ஜெயலலிதா தனது வாரிசாகப் பார்த்தார்.
* பெரும்பான்மையை நிரூபிக்கும் தருணத்தில் முதலமைச்சர் நடந்துகொண்ட விதம் அனைவருக்கும் தெரியும்.
* 2026 சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.
* அ.தி.மு.க. ஆட்சி குறித்து தி.மு.க.வால் விமர்சனம் செய்ய இயலவில்லை.
* தனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது குறை இருந்ததா?
* அனைத்து தேர்தல்களிலும் களப்பணி ஆற்றியவர்கள் இங்கே இருக்கிறீர்கள்.
* நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 100% வெற்றி உறுதி.
* சூழ்ச்சியால்தான் 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
* 1991 சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
* 2006 தேர்தலில் மைனாரிட்டி அரசை நடத்திக்கொண்டிருந்தது தி.மு.க.
* 2014 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலவில்லை.
* 2021 தேர்தலில் 75 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.
* 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களை அ.தி.மு.க. கூட்டணி வென்றெடுத்தது.
* 2011 சட்டசபை தேர்தலில் கலைஞர் இருந்தபோது கூட எதிர்க்கட்சி வரிசையில் தி.மு.க.வுக்கு இடமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.