தமிழ்நாடு செய்திகள்

அமித் ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்தது குறித்து இ.பி.எஸ். விளக்கம்

Published On 2025-09-18 11:44 IST   |   Update On 2025-09-18 11:44:00 IST
  • முகத்தை மறைத்து கொண்டு வெளியே செல்வதற்கு எந்த காரணமும் இல்லை.
  • வேறு எந்த காரணமும் இல்லாததால் தி.மு.க.வினர் நான் முகத்தை துடைத்ததை வைத்து விமர்சிக்கின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் சென்ற தொகுதிகளில் எல்லாம் அ.தி.மு.க.விற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

* யாரை விமர்சனம் செய்தார்களோ அவர்களுக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் ரத்தின கம்பளம் விரித்தனர்.

* தி.மு.க.விற்கு ஆளுங்கட்சி என்றால் ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சி என்றால் ஒரு நிலைப்பாடு.

* எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் வருகைக்கு ஸ்டாலின் கருப்பு கொடி காட்டினார்.

* நான் அமித்ஷாவை சந்திக்கிறேன் என்பது அனைத்து ஊடகங்களுக்கும் தெரியும்.

* நேரம் அதிகம் இருந்ததால் என்னுடன் இருந்தவர்களை அனுப்பி விட்டேன்.

* நான் மட்டும் அமித்ஷாவுடன் 10 நிமிடம் தனியாக சந்தித்து பேசினேன்.

* அரசாங்க காரில் தான் அமித்ஷாவை சந்திக்க சென்றேன்.

* அமித்ஷா வீட்டில் இருந்து காரில் வெளியில் வந்த போது கைக்குட்டையால் முகத்தை துடைத்தேன்.

* முகத்தை துடைப்பதில் என்ன அரசியல் இருக்கிறது.

* ஒரு கட்சியின் பொதுச்செயலாளரை திட்டமிட்டு அவதூறு பரப்புவது சரியல்ல.

* முகத்தை மறைத்து கொண்டு வெளியே செல்வதற்கு எந்த காரணமும் இல்லை.

* வேறு எந்த காரணமும் இல்லாததால் தி.மு.க.வினர் நான் முகத்தை துடைத்ததை வைத்து விமர்சிக்கின்றனர்.

* பொதுவெளியில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது.

* அ.தி.மு.க.வை விமர்சிக்க தி.மு.க.வினருக்கு எந்த தகுதியுமில்லை, அருகதையுமில்லை.

* முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கடிதம் அளித்தேன்.

* நன்றியை மறந்து அமைச்சர் ரகுபதி செயல்படுகிறார்.

* கிட்னி முறைகேடு நடந்ததை அரசே ஒத்து கொண்டுள்ளது.

* தி.மு.க. சட்டமனற் உறுப்பினரின் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடந்துள்ளது.

* கிட்னி திருட்டு போன்றவற்றை சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார்.

இதனிடையே செந்தில் பாலாஜி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பழைய வீடியோவை எடப்பாடி பழனிசாமி காட்டினார். இதன்பின், ஊழல்வாதி என கூறிய செந்தில்பாலாஜிக்கு எப்படி அமைச்சர் பதவியை ஸ்டாலின் கொடுத்தார் என கேள்வி எழுப்பினார்.  

Tags:    

Similar News