தமிழ்நாடு செய்திகள்

தொடரும் ED சோதனை..! முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

Published On 2025-05-17 18:11 IST   |   Update On 2025-05-17 18:11:00 IST
  • யார் அந்த தியாகி என்று கேட்டோம்... தமிழ்நாட்டிற்கே தெரிந்த பதில் என்றாலும் மு.க.ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.
  • இப்போது கேட்கிறோம்- யார் அந்த தம்பி? எப்படி வந்தது இந்த தம்பிக்கு இவ்வளவு அதிகாரம்?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

2-வது நாளாக தொடரும் ED ரெய்டுகள்!

-இன்னும் இந்த ரெய்டுகள் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன்?

-தன் குடும்பத்தைச் சார்ந்தவர் வீட்டிலும், தனக்கு நெருக்கமானவர் வீட்டிலும் நடக்கும் இந்த ரெய்டு பற்றி ஏன் பேச மறுக்கிறார்?

-ரத்தீஷ் எங்கே இருக்கிறார்? துபாய் சென்றுவிட்டதாக வரும் செய்திகள் உண்மையா? அப்படியென்றால், ரெய்டு வருமோ என்ற அச்சத்தில் தலைமறைவானாரா ரத்தீஷ்?

-முதல்வராலும், அவரது மகனாலும் "தம்பி" என்று அன்போடு அழைக்கப்படும் ரத்தீஷின் "Job Description" என்ன?

யார் அந்த SIR என்று கேட்டோம்- பதில் வரவில்லை.

யார் அந்த தியாகி என்று கேட்டோம்... தமிழ்நாட்டிற்கே தெரிந்த பதில் என்றாலும் மு.க.ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.

இப்போது கேட்கிறோம்- யார் அந்த தம்பி? எப்படி வந்தது இந்த தம்பிக்கு இவ்வளவு அதிகாரம்?

இந்த தம்பி கைதாகும் போது, தம்பியின் வசம் உள்ள திமுக-வின் குடுமி சிக்கும்! அப்போது பேசித் தானே ஆக வேண்டும்

மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்?

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News