தமிழ்நாடு செய்திகள்

VIDEO: எனக்கும் குளிரும் இல்ல... கார் கண்ணாடியில் இருந்து பாய்ந்த பாம்பு- அதிர்ச்சியில் உறைந்த டிரைவர்

Published On 2025-11-12 13:15 IST   |   Update On 2025-11-12 13:15:00 IST
  • வன விலங்கு மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • குளிர் மற்றும் மழைக்காலங்களில் வாகன உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வீடியோ காட்டுவதாக பலரும் பதிவிட்டனர்.

குளிர் மற்றும் மழை காலங்களில் பாம்புகள் வெப்பம் தேடி வாகனங்களுக்குள் தஞ்சமடையும் சம்பவங்கள் நிகழ்ந்தது உண்டு. இந்நிலையில் தமிழ்நாட்டின் நாமக்கல்-சேலம் சாலையில் கார் ஓட்டி சென்ற ஒருவர் காரின் கண்ணாடியில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

அதில், கார் டிரைவர் நெடுஞ்சாலையில் கார் ஓட்டி செல்கிறார். அப்போது காரின் பக்கவாட்டு கண்ணாடியில் ஏதோ அசைவு இருப்பதை கண்டார். அப்போது கண்ணாடியின் மறைவில் இருந்து ஒரு பாம்பு வெளியே வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் காரை நிறுத்தி விட்டு அதில் இருந்து வெளியேறினார்.

பின்னர் அவ்வழியே சென்றவர்கள் வன விலங்கு மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர் அந்த பாம்பை பாதுகாப்பாக மீட்டு கொண்டு சென்றனர். இதுகுறித்த காட்சிகள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டது. குளிர் மற்றும் மழைக்காலங்களில் வாகன உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ காட்டுவதாக பலரும் பதிவிட்டனர்.



Tags:    

Similar News