தமிழ்நாடு செய்திகள்

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-06-13 10:10 IST   |   Update On 2025-06-13 10:10:00 IST
  • தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஜூன் முதல் வாரத்தில் ஒன் டூ ஒன் பேசுவோம் எனக் கூறியிருந்தார்.
  • முதற்கட்டமாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் வெற்றிக்கான வியூக வகுப்பில் தி.மு.க. தீவிரமாக இருக்கிறது.

ஜூன் முதல் வாரம் முதல் தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.

மதுரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஜூன் முதல் வாரத்தில் ஒன் டூ ஒன் பேசுவோம் எனக் கூறியிருந்த நிலையில், இன்று முதற்கட்டமாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.

Tags:    

Similar News