தமிழ்நாடு செய்திகள்

உவேசா-வின் பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி தினமாக கொண்டாடப்படும்: முதலமைச்சர்

Published On 2024-12-10 10:49 IST   |   Update On 2024-12-10 12:22:00 IST
  • தமிழ் தாத்தா உ.வே.சாமி நாத அய்யருக்கு ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
  • உறுப்பினரின் கோரிக்கை பற்றி முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.

சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசியபோது தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓலை சுவடிகளை பதிப்பகங்களாக மாற்றி உள்ளார். அவரது பிறந்தநாளையொட்டி தமிழ் புலவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி விருதுகளும் வழங்கப்பட்டன.

பிப்ரவரி 19 அவரது பிறந்தநாள். அந்த நாளை இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவித்து கொண்டாட வேண்டுகிறேன் என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.

தமிழ் தாத்தா உ.வே.சாமி நாத அய்யருக்கு ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளில் கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

உறுப்பினரின் கோரிக்கை பற்றி முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.

இதைத் தொடர்ந்து முதலச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்துபேசினார். அவர் கூறும்போது, உ.வே.சாமி நாத அய்யருக்கு தமிழக அரசு உரிய மரியாதையை செலுத்தி வருகிறது. உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று அவரது பிறந்தநாள் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்றார்.

Tags:    

Similar News