தமிழ்நாடு செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2025-04-28 10:01 IST   |   Update On 2025-04-28 10:57:00 IST
  • அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • அரசு பணியாளர்கள், ஆசிரியர்களின் பிள்ளைகளின் கல்விக்காக தரப்படும் கல்வி முன்பணம் உயர்த்தி வழங்கப்படும்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய நிகழ்வு தொடங்கியது. சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டிருந்த ஈட்டிய 15 நாள் விடுப்புக்கான பணப்பலனை மீண்டும் பெறலாம்.

* அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும்.

* அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

* ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* அரசு பணியாளர்கள், ஆசிரியர்களின் பிள்ளைகளின் கல்விக்காக தரப்படும் கல்வி முன்பணம் உயர்த்தி வழங்கப்படும்.

* தொழில்நுட்ப கல்விக்கான முன்பணம் ரூ.1 லட்சமாகவும் கலை, அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் படிப்பு முன்பணம் ரூ.50,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* அரசு பணியாளர், ஆசிரியருக்கான மகப்பேறு விடுப்பு காலம் ஓராண்டாக உயர்த்தப்படும்.

* மகப்பேறு விடுப்பு காலத்தை பதவி உயர்வுக்கு தகுதி காலமாக எடுத்துக்கொள்ளப்படும்.

* பழைய பென்சன் திட்டம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு செப்டம்பர் 30-க்குள் அறிக்கை அளிக்க அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News