தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை- நயினார் நாகேந்திரன்

Published On 2025-07-15 18:49 IST   |   Update On 2025-07-15 18:49:00 IST
  • அதிமுக-வுடன் கூட்டணி வைத்த நாளில் இருந்து பதட்டத்திலும், விரக்தியில் இருக்கிறார்கள்.
  • தோற்கப்போவது உறுதி என்பது அவர்கள் எல்லோருக்கும் தெரிகிறது.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது படி படி என்கிறது திராவிட மாடல். படிக்காதே என்கிறது காவி கும்பல் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்கிறாரே? என்ற கேள்விக்கு "முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

ஓரணியில் திரள்வோம், ஓரணியில் சேருவோம் என்கிறார். இப்போது ஓரணியில் சேர என்ன அவசரம் வந்துள்ளது. படிப்பதற்கு பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை கொடுத்திருக்கிறார். தோல்வி பயத்தில் இருக்கிறார்கள். அமித் ஷா சென்னை வந்து, அதிமுக-வுடன் கூட்டணி வைத்த நாளில் இருந்து பதட்டத்திலும், விரக்தியில் இருக்கிறார்கள்.

தோற்கப்போவது உறுதி என்பது அவர்கள் எல்லோருக்கும் தெரிகிறது. தோல்வி பயத்தில் அடுக்கு மொழியில் பேசிகிட்டு.. இதே காவி கும்பல் உடன்தான் கலைஞர் கூட்டணி வைத்தார். இந்த காவி கும்பல் உடன்தான் அன்னைக்கு இருந்தார்கள்" என்றார்.

மேலும், "பாஜக உடன் கூட்டணி வைக்கும்போது சங்கிகளாகத்தான் இருந்தார்கள். பாஜக-விடம் அதிமுக-வை அடகு வைத்ததாக சொல்கிறார்கள். அப்படி கிடையாது. காங்கிரஸ் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுக-விடம் அடகு வைத்துள்ளார்களா?. இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

அதிமுக-வை பாஜக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி கொண்டிருக்கிறது எனச் சொல்கிறார்கள். அதைப் பற்றி அக்கறை அவர்களுக்கு எதற்கு. பாஜக, திமுக உடன் கூட்டணி வைத்திருந்தது. அப்போது அவர்களை விழுங்கினோமா?. தோல்வி பயத்தில் ஏதாவது சொல்ல வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு நல்ல ஆட்சி வர வேண்டும். திமுக 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என்கிறார்கள். நாங்கள் 234 தொகுதிகளிலும் ஜெயிப்வோம்" என்றார்.

Tags:    

Similar News