தமிழ்நாடு செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் கனமழை - குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிப்பு

Published On 2025-11-18 16:48 IST   |   Update On 2025-11-18 16:48:00 IST
  • மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது
  • குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்தது.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளை வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்த பிறகு குளிக்க தடை விதிப்பது தொடர்பாக உத்தரவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News