சட்டசபை தேர்தலில் போட்டியிட அண்ணாமலை மறுப்பு?
- விருப்பப்பட்டியலை தயாரித்து மேலிடத்திற்கு அனுப்ப நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளார்.
- விருதுநகரில் போட்டியிட சரத்குமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் கட்சி தலைவர்கள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பத்தை கேட்டறிந்து வருகிறார். விருப்பப்பட்டியலை தயாரித்து மேலிடத்திற்கு அனுப்ப அவர் முடிவு செய்துள்ளார்.
பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு நயினார் நாகேந்திரன் பேசி உள்ளார். அப்போது, சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என அண்ணாமலை கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழிசை, சரத்குமார் போன்றோர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். விருதுநகரில் போட்டியிட சரத்குமார் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட தமிழிசை விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.