தமிழ்நாடு செய்திகள்

யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் - அன்புமணி வேண்டுகோள்

Published On 2025-05-29 14:53 IST   |   Update On 2025-05-29 14:53:00 IST
  • தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்தார்.
  • சென்னை பனையூர் இல்லத்திற்கு தன்னை சந்திக்க யாரும் வரவேண்டாம்.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என அன்புமணி வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பனையூர் இல்லத்திற்கு தன்னை சந்திக்க யாரும் வரவேண்டாம் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

அன்புமணி மீது அவரது தந்தை ராமதாஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News