தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்

Published On 2025-12-21 08:31 IST   |   Update On 2025-12-21 08:31:00 IST
  • வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.
  • சென்னையில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீவிர திருத்தப்பணிக்கு பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தின் வெளியிடப்பட்டது. இதில் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்களே உள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்களுக்காக சென்னையில் நேற்று், இன்றும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்காக சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று விண்ணப்பித்து சென்றனர்.

சென்னையில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக சேர வேண்டியவர்கள் படிவம் 6-ஐயும், ஒருவரின் பெயர் தவறாக சேர்க்கப்பட்டிருந்தால் படிவம் 7-ஐயும், முகவரி, பெயர் மாற்றத்திற்கு படிவம் 8-ஐயும் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்காக சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News