வேளாண் பட்ஜெட்: 100 முன்னோடி விவசாயிகள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்...
கால்நடை இனப்பெருக்க திறனை மேம்படுத்த ரூ.5.25 கோடி ஒதுக்கீடு
உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உணவு மானியத்திற்கு ரூ.12,500 கோடி நிதி ஒதுக்கீடு
நெல் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு ரூ.525 கோடி நிதி ஒதுக்கீடு
மண்புழு உரம் தயாரிக்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
நெல் ஈரப்பதத்தை அளவிட 2500 டிஜிட்டல் கருவிகள் வழங்கப்படும்.
2 லட்சத்து 63 ஆயிரம் மெட்ரின் டன் கொண்ட நெல் சேமிப்பு மையம் அமைக்கப்படும்.
பாசனத்திற்கு கடைமடை வரை நீர் செல்ல ரூ.120 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
வரும் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,427 கோடி நிதி ஒதுக்கீடு.
சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளை பொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகம் அமைக்க ரூ.6.16 கோடி நிதி ஒதுக்கீடு.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்.