தமிழ்நாடு செய்திகள்
திருடனாக மாறிவிட்ட தேர்தல் ஆணையம் - ஆ.ராசா கடும் தாக்கு
- தேர்தல் ஆணையம் ஒழுங்காக இருந்த காலத்தில் தேர்தல் காலத்தில் மட்டுமே தேர்தல் பணி.
- தேர்தல் ஆணையம் திருடனாக இருப்பதால் தி.மு.க. களத்தில் இருக்கிறது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசா வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
* இந்தியாவில் தேர்தல் ஆணையமே திருடனாக மாறிவிட்டது.
* SIR திட்டத்தை அமல்படுத்திய தேர்தல் ஆணையம் திருடன் என்றால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பெரும் திருடர்கள்.
* தேர்தல் ஆணையம் ஒழுங்காக இருந்த காலத்தில் தேர்தல் காலத்தில் மட்டுமே தேர்தல் பணி.
* தேர்தல் ஆணையம் திருடனாக இருப்பதால் தி.மு.க. களத்தில் இருக்கிறது.
* திருடர்களிடம் இருந்து தேர்தல் ஆணையத்தை காப்பாற்ற நாம் போராட வேண்டி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.