தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. சார்பில் நாளை 2-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா

Published On 2025-06-03 09:12 IST   |   Update On 2025-06-03 09:12:00 IST
  • முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகளை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.
  • விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகளை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.

இந்த நிலையில், த.வெ.க. சார்பில் நாளை 2-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் இவ்விழா நடைபெற உள்ளது.

இதில் 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், ஊக்கத்தொகையையும் த.வெ.க. தலைவர் விஜய் வழங்க உள்ளார். மேலும் மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார்.

இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News