தமிழ்நாடு

தமிழ்நாட்டை வஞ்சித்த அ.தி.மு.க.வையும் சேர்த்து விரட்டியடிப்போம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-04-06 01:15 GMT   |   Update On 2024-04-06 01:15 GMT
  • வாக்குப்பதிவு நெருங்கி வருவதால், போட்டி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • இந்தியாவை அழிக்கத் திட்டம்போடும் நாசகார சக்தியான பா.ஜ.க வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு.

மக்களவை தேர்தல் முதற்கட்டமாகவும், தமிழகத்தில் ஒரே கட்டமாகவும் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நெருங்கி வருவதால், போட்டி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிமுக, பாஜக ஆட்சியை கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

ஒரே உணவு, ஒரே மொழி, ஒரே மதம் என 'ஒரே'யடியாக இந்தியாவை அழிக்கத் திட்டம்போடும் நாசகார சக்தியான பா.ஜ.க வீட்டுக்கு, நாட்டுக்குக் கேடு!

பிரதமர் மோடி எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் அவரால் கைப்பற்றவே முடியாத திராவிட எஃகுக் கோட்டையாகவே தமிழ்நாடு என்றும் இருக்கும்!

இந்த இரண்டாவது விடுதலைப் போரில், எதிரிகளோடு, அவர்களுக்குத் துணைபோகும் கட்சிகளையும், தமிழ்நாட்டை வஞ்சித்த அ.தி.மு.க.வையும் சேர்த்து விரட்டியடிப்போம்! தென்னகத்தின் விடியல் ஒளி டெல்லியிலும் பரவிட இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News