தமிழ்நாடு செய்திகள்

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

Published On 2023-03-07 12:03 IST   |   Update On 2023-03-07 12:03:00 IST
  • புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருந்ததால் கடந்த மாதம் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
  • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி. இதில் 2,474 மி.கன அடி தண்ணீர் உள்ளது.

ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

பூண்டி ஏரியில் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழை நீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்புவது வழக்கம்.

புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருந்ததால் கடந்த மாதம் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இணைப்பு கால்வாய் வழியாக 150 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி. இதில் 2,474 மி.கன அடி தண்ணீர் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கனஅடி. இதில் 2,957 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக 185 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News