தமிழ்நாடு

ஜனநாயக கடமையை அனைவரும் நிறைவேற்றுங்கள்- நல்ல வெற்றி கிடைக்கும்

Published On 2024-04-19 07:23 GMT   |   Update On 2024-04-19 07:23 GMT
  • காலையில் 11 மணி வரை கிட்டதட்ட 18 சதவீதம் வாக்குப்பதிவு ஆகி உள்ளது.
  • உங்களுக்கு யார் சரியான ஆட்சியாளர்கள் வர வேண்டும் என்பதை இந்த தேர்தல் மூலம் காட்டுங்கள்.

சென்னை:

தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மனைவி கிருத்திகாவுடன் தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரிக்கு சென்று வாக்களித்தார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னுடைய ஜனநாயக கடமையை வாக்களித்து நிறைவேற்றி இருக்கிறேன். முதலமைச்சர் சொன்னது மாதிரி, எல்லோரும் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள். காலையில் 11 மணி வரை கிட்டதட்ட 18 சதவீதம் வாக்குப்பதிவு ஆகி உள்ளது. இன்னும் மாலை 6 மணி வரை நேரம் உள்ளது.

பொதுமக்கள் அனைவரும் யார் யாருக்கு வாக்குரிமை இருக்கிறதோ முக்கியமாக இளைஞர்கள் வந்து உங்களுடைய கடமையை செய்யுங்கள். உங்களுக்கு யார் சரியான ஆட்சியாளர்கள் வர வேண்டும் என்பதை இந்த தேர்தல் மூலம் காட்டுங்கள்.

கேள்வி:- தமிழ்நாடு முழுவதும் நிலவரம் எப்படி உள்ளது?

பதில்:- தமிழ்நாடு முழுவதும் பயணித்தேன். எனக்கு தெரிந்தவரை நல்ல வெற்றி கிடைக்கும் ஜூன் 4-ந்தேதி பேசிக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News