தமிழ்நாடு
ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது- மின்வாரியம் எச்சரிக்கை
- மின்வாரிய ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.
- எந்த இடத்திலும் மின்தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை:
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.
மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்தினால் பொதுமக்களுக்கு, பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அந்தந்த செயற்பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எந்த இடத்திலும் மின்தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
அதே சமயம் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் மின்வாரிய ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் கிடைக்காது என்றும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை பணிக்கு வராதோர் விவரங்களை காலை 10.45 மணிக்குள் தலைமையிடத்திற்கு அனுப்புமாறு மண்டல பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.