தமிழ்நாடு செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2024-08-09 20:35 IST   |   Update On 2024-08-09 20:35:00 IST
  • இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறைக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன.
  • இதனால் கடந்த மாதமும் கூடுதல் வேலை நாளில் விடுமுறை விடப்பட்டது.

சென்னை:

ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறைக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இதனால் கடந்த மாதமும் கூடுதல் வேலை நாளில் விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தற்போது 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை பள்ளி வேலை நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News